உண்மை சம்பவத்தை பேச வரும் ‘சாரி’
ரவி வர்மா தயாரிப்பில், கிரி கிருஷ்ணா கமல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் சாரி (SAAREE) . இந்தப் படம் பல நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர்.
சேலை அணிந்த ஒரு பெண்ணின் மீது தீரா அன்பு வைத்திருக்கும் ஒருவன் அவளைப் பின்தொடர்ந்து தொல்லை தருகிறான். ஒருக்கட்டத்தில் அதுவே ஆபத்தாக மாறுகிறது என்பதுதான் ‘சாரி’ படத்தின் கதை.
படத்தை கிரி கிருஷ்ணா கமல் இயக்க, சபரி ஒளிப்பதிவு செய்துள்ளார். இதில் கதாநாயகனாக சத்யா யாது நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக ஆராத்யா தேவி நடித்துள்ளார். முன்பு ஸ்ரீலக்ஷ்மி என்று அழைக்கப்பட்ட ஆராத்யா தேவி கேரளாவைச் சேர்ந்தவர்.
இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய 4 மொழிகளில் நவம்பர் மாதம் வெளியாகிறது.