திரைவிழா

32 துறைகளில் சாதனை படைத்த பெண் இயக்குனர்

சென்னை: இயக்குனரும் தயாரிப்பாளரும் நடிகையும் பாடகியுமான  லாவண்யா 32 துறைகளில் தடம் பதித்து உருவாக்கியுள்ள திரைப்படம் பேய் கொட்டு.

இயக்குனர், தயாரிப்பாளர், நடிகை மற்றும் பாடகியுமான  லாவண்யா, கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘பேய் கொட்டு’.

இப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இந்த  விழாவில்  இயக்குநர் பேரரசு, ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம், நடிகர் கூல் சுரேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

அறிமுக இயக்குநர் எஸ் லாவண்யா இயக்கத்தில் உருவாகியுள்ள பேய் கொட்டு எனும் திரைப்படத்தில் எஸ்.லாவண்யா, தீபா சங்கர், ஸ்ரீஜா ரவி, சாந்தி ஆனந்தராஜ், பட்டம்மா, ஆடம், சசிகுமார், செல்வம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் அனைத்து தொழில்நுட்ப பணிகளையும் இயக்குநர் எஸ். லாவண்யா சுயமாக கற்றுக்கொண்டு கையாண்டிருக்கிறார்.  அந்த வகையில் இந்த பெண் படைப்பாளி புதிய சாதனையை படைத்திருக்கிறார். ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஓம் சாய் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் எஸ்லாவண்யா தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் டீசர், டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், திரைப்படம் வரும் 21ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இதனிடையே இந்தத் திரைப்படம்  பத்துக்கும் மேற்பட்ட சர்வதேச  விருதுகளை வென்றிருக்கிறது என்பதும்,  ஒரு பெண்மணி திரைத்துறையில் உள்ள அனைத்து பிரிவுகளையும் பற்றி கற்று தேர்ச்சி அடைந்து அதனை தொடர்ந்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தில் நாய் ஒன்றும், பேய் கதாபாத்திரமும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் காமெடி ஹாரர் கலந்த கதையில் உருவாகியுள்ளது.

இயக்குனர் லாவண்யா இசைத்துறையில் எம்.ஏ., இந்துஸ்தானி இசையை பஞ்சாபில் படித்துள்ளார். இவர் சினிமாவில் பாடகியாக வர வேண்டுமென ஆசைப்பட்டவர். முழுத் துறையையும் கற்றுக்கொண்டு 32 துறைகளிலும் சாதனை படைத்துள்ளார்.